ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர், ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூர், ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஐதராபாத்-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

ஐதராபாத்,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர், இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று ஐதராபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ஐதராபாத்-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி சார்பில் பர்த்தொலொமேயு ஆட்டத்தின் 12 மற்றும் 79-வது நிமிடத்தில் என்று இரண்டு கோல்கள் அடித்தார்.

ஜாம்ஷெட்பூர் அணி சார்பில் ரித்விக் தாஸ் ஆட்டத்தின் 22-வது நிமிடத்திலும் இம்மானுவேல் தாமஸ் ஆட்டத்தின் 27-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். டேனியல் ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆட்டநேர முடிவில் ஜாம்ஷெட்பூர் அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து கொல்கத்தாவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் திமித்ரியோஸ் ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

ஏ.டி.கே மோகன் பகான் அணி சார்பில் கார்ல் ஆட்டத்தின் 23 மற்றும் 71-வது நிமிடத்தில் என்று இரண்டு கோல்கள் அடித்தார். இதையடுத்து ஏ.டி.கே மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story