ஜெய் ஷாவுக்கு தனது கையெழுத்திட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை அனுப்பிய மெஸ்சி
பிரக்யான் ஓஜா, தனது சமூகவலைத்தளத்தில் புகைப்படமாக பகிர்ந்துள்ளார்.
கத்தாரில் நடந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரில் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி பெனால்டி ஷூட்-அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்து 3-வது முறையாக மகுடம் சூடியது. 1986-ம் ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா உச்சிமுகர்ந்த முதல் உலகக் கோப்பை இது தான். அத்துடன் கால்பந்து உலகின் சூப்பர்ஸ்டாரும், அர்ஜென்டினா கேப்டனுமான லயோனல் மெஸ்சி முதல்முறையாக உலகக் கோப்பையை கையில் ஏந்திய பொன்னான தருணமும் இது தான்.
மெஸ்ஸிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. மெஸ்ஸியின் வெற்றியை உலகமே கொண்டாடி வரும் நிலையில்,இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷாவுக்கு, லியோனல் மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட அர்ஜென்டினா ஜெர்ஸியை அனுப்பியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனை இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போது இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கப் பிரதிநிதியாக இருப்பவருமான பிரக்யான் ஓஜா, தனது சமூகவலைத்தளத்தில் புகைப்படமாக பகிர்ந்து, `எனக்கான ஒன்றை விரைவில் பெறுவேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.