ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணியில் ரபெல் மீண்டும் ஒப்பந்தம்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. அணியில் ரபெல் மீண்டும் ஒப்பந்தம்
x
தினத்தந்தி 5 Aug 2023 7:47 PM GMT (Updated: 6 Aug 2023 6:52 AM GMT)

சென்னையின் எப்.சி. அணி ரபெல் கிரிவெல்லாரோவை மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது.

10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, பிரேசில் நாட்டை சேர்ந்த நடுகள வீரரான ரபெல் கிரிவெல்லாரோவை மீண்டும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த சீசனில் சென்னை அணியில் சேர்ந்து இருக்கும் 3-வது வெளிநாட்டு வீரர் ரபெல் ஆவார். 34 வயதான ரபெல் கடந்த சீசனில் பிற்பாதியில் ஜாம்ஷெட்பூர் அணிக்காக விளையாடினார். அதற்கு முன்னதாக 2020-21-ம் ஆண்டு சென்னையின் எப்.சி. அணியின் கேப்டனாக இருந்த ரபெல் 2019-20-ம் ஆண்டு போட்டியில் 7 கோல்கள் அடித்து அனைவரையும் கவர்ந்தார் என்பது நினவுக்கூரத்தக்கது. சென்னை அணியின் தலைமை பயிற்சியாளராக மறுபடியும் ஓவென் கோயல் (ஸ்காட்லாந்து) கடந்த மாதம் நியமிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ரபெல் மீண்டும் அணிக்கு திரும்பி இருக்கிறார்.


Next Story