தெற்காசிய கால்பந்து போட்டி: இந்தியா-குவைத் அணிகள் மோதிய போட்டி 'டிரா'


தெற்காசிய கால்பந்து போட்டி: இந்தியா-குவைத் அணிகள் மோதிய போட்டி டிரா
x

'ஏ' பிரிவில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

பெங்களூரு,

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இந்த போட்டி தொடரில் 'ஏ' பிரிவில் இன்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-குவைத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 45வது நிமிடத்தில் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்தார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது .ஆட்டத்தின் 90வது நிமிடம் முடிந்து வழங்கபட்ட கூடுதல் நிமிடத்தில் தடுப்பாட்டத்தில் இந்திய அணியின் அன்வர் அலி செய்த தவறால் பந்து கோல் வளைக்குள் செல்ல குவைத் அணிக்கு கோல் வழங்கப்ட்டது.

இதனால் ஆட்ட நேர முடிவில் 1-1 என போட்டி டிராவல் முடிந்தது. இந்திய அணி மற்றும் குவைத் அணி ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.


Next Story