தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: லெபனான் அணி 'ஹாட்ரிக்' வெற்றி


தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி: லெபனான் அணி ஹாட்ரிக் வெற்றி
x

Image Courtesy : @SAFFfootball twitter

அரைஇறுதியில் லெபனான் அணி நடப்பு சாம்பியனான இந்திய அணியுடன் மோதுகிறது.

பெங்களூரு,

14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் நேற்று நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் பலம் வாய்ந்த லெபனான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை (ஹாட்ரிக்) ருசித்தது.

வெற்றிக்குரிய கோலை 24-வது நிமிடத்தில் கேப்டன் ஹசன் அலி மாடோக் அடித்தார். 'பி' பிரிவில் முதலிடத்தை பிடித்த லெபனான் அணி அரைஇறுதியில் 'ஏ' பிரிவில் 2-வது இடத்தை பெற்ற நடப்பு சாம்பியன் இந்தியாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் வருகிற 1-ந்தேதி நடக்கிறது. அதே நாளில் நடக்கும் மற்றொரு அரைஇறுதியில் குவைத்-வங்காளதேச அணிகள் சந்திக்கின்றன.


Next Story