உலகக் கோப்பை கால்பந்து: கத்தார் சென்றடைந்த ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி- உற்சாக வரவேற்பு


உலகக் கோப்பை கால்பந்து: கத்தார் சென்றடைந்த ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி-  உற்சாக வரவேற்பு
x

Image Courtesy : Portugal Twitter 

கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி அணி இன்று கத்தார் சென்று அடைந்துள்ளது.

தோகா,

பிபா சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கால்பந்து உலகக் கோப்பை தொடரை நடத்திவருகிறது. கால்பந்து உலக கோப்பை தொடர் சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு திருவிழா. அந்த வகையில் 22-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நாளை தொடங்குகிறது. இந்த கால்பந்து தொடரில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முன்னாள் சாம்பியன்களான பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, ஸ்பெயின் உள்பட 32 அணிகள் பங்கேற்கின்றன.

அவை 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. 20-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் கத்தார்- ஈகுவடார் அணிகள் சந்திக்கின்றன. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கத்தார் நாட்டு அரசு செய்து உள்ளது. இந்த நிலையில் உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக ஒவ்வொரு நாட்டு அணியும் கத்தார் வந்த வண்ணமாய் உள்ளன. அந்த வகையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுக்கல் அணி அணி இன்று கத்தார் சென்று அடைந்துள்ளது.

கத்தார் வந்த போர்ச்சுக்கல் வீரர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.போர்ச்சுக்கல் தங்கள் முதல் போட்டியில் வரும் 24 ஆம் தேதி கானா அணியுடன் மோதுகிறது.


Next Story