தென்கொரியா போட்டி தொடர்: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு


தென்கொரியா போட்டி தொடர்: இந்திய பெண்கள் ஆக்கி அணி அறிவிப்பு
x
தினத்தந்தி 10 May 2019 9:30 PM GMT (Updated: 10 May 2019 8:08 PM GMT)

இந்திய பெண்கள் ஆக்கி அணி வருகிற 20–ந் தேதி முதல் தென்கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

புதுடெல்லி, 

இந்திய பெண்கள் ஆக்கி அணி வருகிற 20–ந் தேதி முதல் தென்கொரியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. ஜப்பானில் அடுத்த மாதம் (ஜூன்) நடைபெறும் உலக பெண்கள் சீரிஸ் இறுதி சுற்று ஆக்கி போட்டிக்கு தயாராகும் விதத்தில் இந்திய பெண்கள் அணி இந்த பயணத்தை மேற்கொள்கிறது. தென்கொரியா போட்டி தொடருக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. முன்கள வீராங்கனை ராணி கேப்டனாகவும், கோல் கீப்பர் சவிதா துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய பெண்கள் ஆக்கி அணி வீராங்கனைகள் வருமாறு:–

கோல்கீப்பர்கள்: சவிதா, ரஞ்சனி எதிமர்பு, பின்களம்: சலிமா, சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, கரிஷ்மா யாதவ், குர்ஜித் கவுர், சுஷிலா சானு, நடுகளம்: மோனிகா, நவ்ஜோத் கவுர், நிக்கி பிராதன், நேகா கோயல், லிலிமா மின்ஸ், முன்களம்: ராணி, வந்தனா கட்டாரியா, லால்ரிம்சியாமி, ஜோதி, நவ்னீத் கவுர்.


Next Story