புரோ ஆக்கி லீக் தொடர்: வெற்றியோடு நிறைவு செய்தது இந்திய அணி


புரோ ஆக்கி லீக் தொடர்: வெற்றியோடு நிறைவு செய்தது இந்திய அணி
x

அமெரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில், இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரோட்டர்டாம்,

9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது பெண்கள் புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

அந்த வகையில் இந்திய அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் அமெரிக்காவை எதிர்கொண்டது. இந்த இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஆட்டத்தில் இந்தியா 4-2 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது. இந்திய தரப்பில் தீப் கிரேஸ், நவ்னீத் கவுர், சோனிகா, வந்தனா ஆகியோர் கோல் அடித்தனர்.

அதனை தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிரான 2-வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில், தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றது. வந்தனா (2 கோல்), சோனிகா, சங்கீதா ஆகியோர் கோல் போட்டனர்.

வெற்றியோடு நிறைவு செய்த இந்திய அணி பட்டியலில் 30 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தது. அர்ஜென்டினா 42 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


Next Story