துப்பாக்கி சுடுதல் நீக்கம்: பிந்த்ரா எதிர்ப்பு


துப்பாக்கி சுடுதல் நீக்கம்: பிந்த்ரா எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 April 2018 10:45 PM GMT (Updated: 20 April 2018 10:02 PM GMT)

துப்பாக்கி சுடுதல் நீக்கத்திற்கு பிந்த்ரா எதிர்ப்பு தெரிவித்தார்.

புதுடெல்லி,

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடுதல் வீரரான அபினவ் பிந்த்ரா அளித்த ஒரு பேட்டியில் ‘2022-ம் ஆண்டு பர்மிங்காமில் நடக்கும் காமன்வெல்த் விளையாட்டில் துப்பாக்கி சுடுதல் பந்தயம் நீக்கப்படுவது, நமது நாட்டுக்கும், நம்முடைய துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கும் பெரிய பின்னடைவாகும். இது முன்னணி மற்றும் வளர்ந்து வரும் துப்பாக்கி சுடுதல் வீரர்களுக்கு கடினமானதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. துப்பாக்கி சுடுதல் விருப்பப்பட்டால் வைத்துக் கொள்ளும் பந்தயமாகும். ஆனால் தங்களிடம் துப்பாக்கி சுடுதல் பந்தயத்திற்கு போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்று கூறி போட்டி அமைப்பு குழுவினர் அதை நீக்கியுள்ளனர்’ என்றார்.

Next Story