அகில இந்திய கைப்பந்து: இறுதிப்போட்டியில் சாய் அணி


அகில இந்திய கைப்பந்து: இறுதிப்போட்டியில் சாய் அணி
x
தினத்தந்தி 28 Jun 2019 10:19 PM GMT (Updated: 28 Jun 2019 10:19 PM GMT)

அகில இந்திய கைப்பந்தின் இறுதிப்போட்டிக்கு சாய் அணி தகுதிபெற்றது.

சென்னை,

நெல்லை பிரண்ட்ஸ் கிளப், டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் தினத்தந்தி மற்றும் எஸ்.என்.ஜே. குரூப் ஆதரவுடன் பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று பெண்கள் பிரிவில் நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் சாய் (தலச்சேரி) அணி 25-20, 23-25, 25-20, 26-24 என்ற செட் கணக்கில் ஐ.சி.எப். (சென்னை) அணியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் தென் மத்திய ரெயில்வே 25-8, 25-21, 22-25, 25-11 என்ற செட் கணக்கில் டாக்டர் சிவந்தி கிளப்பை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஆண்கள் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சுங்க இலாகா அணி 25-18, 25-18, 25-22 என்ற நேர்செட்டில் வருமானவரி (சென்னை) அணியை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. இதே போல் ஐ.சி.எப். அணி 25-18, 25-19, 25-15 என்ற நேர்செட்டில் தமிழ்நாடு போலீஸ் அணியையும், வருமானவரி அணி (குஜராத்) 25-17, 18-25, 25-21, 23-25, 15-11 என்ற செட் கணக்கில் இந்தியன் வங்கியையும் சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தது.


Next Story