பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டி - சென்னையில் நடக்கிறது


பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டி - சென்னையில் நடக்கிறது
x
தினத்தந்தி 7 Dec 2019 10:34 PM GMT (Updated: 7 Dec 2019 10:34 PM GMT)

பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டி சென்னையில் நடைபெற உள்ளது.

சென்னை,

எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி சார்பில் பள்ளி மாணவிகளுக்கான மாநில தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் அடுத்த மாதம் (ஜனவரி) 20, 21-ந் தேதிகளில் நடக்கிறது. சீனியர் (9 மற்றும் 10-ம் வகுப்பு), சூப்பர் சீனியர் (பிளஸ்-1, பிளஸ்-2) ஆகிய பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. இதில் 100 மீட்டர், 400 மீட்டர், 1,500 மீட்டர், 3 ஆயிரம் மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், 100 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகிய பந்தயங்கள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படும். இந்த போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயரை பதிவு செய்ய வருகிற 30-ந் தேதி கடைசி நாளாகும் என்று எம்.ஓ.பி.வைஷ்ணவா கல்லூரி உடற்கல்வி இயக்குனர் அமுதா சுமன்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story