தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: கரோலினா மரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 16 Jan 2021 11:51 PM GMT (Updated: 16 Jan 2021 11:51 PM GMT)

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் இறுதி ஆட்டத்திற்கு தகுதி பெற்றார்.

பாங்காக்,

பாங்காக்கில் நடந்து வரும் யோனெக்ஸ் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியின் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) 21-18, 21-16 என்ற நேர் செட்டில் அன் சி யங்கை (தென்கொரியா) தோற்கடித்தார். கரோலினா மரின் மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீன தைபே) இன்று சந்திக்கிறார்.

Next Story