சர்வதேச குத்துச்சண்டை போட்டி இன்று முதல் 7-ந்தேதி வரை ஸ்பெயினில் நடக்கிறது.
சர்வதேச குத்துச்சண்டை போட்டி இன்று முதல் 7-ந்தேதி வரை ஸ்பெயினில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக 6 முறை உலக சாம்பியனான மேரிகோம் தலைமையில் 14 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அதிகாலை ஸ்பெயின் புறப்பட்டு சென்றது. அணியில் 8 வீரர்களும், 6 வீராங்கனைகளும் இடம் பெற்றுள்ளனர். இதில் 9 பேர் டோக்கியோ ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்றவர்கள் என்பதால் இந்த போட்டி எதி்ாபார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது. தேர்தலில் போட்டியிட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மனு செய்து உள்ளனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் போட்டியிட 90 பேர் மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.