ஒலிம்பிக்: பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் இஸ்ரேல் வீரரிடம் தோல்வி


ஒலிம்பிக்:  பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய் பிரணீத் இஸ்ரேல் வீரரிடம் தோல்வி
x
தினத்தந்தி 24 July 2021 5:48 AM GMT (Updated: 24 July 2021 5:48 AM GMT)

ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சாய் பிரணீத் இஸ்ரேல் வீரரிடம் தோல்வி அடைந்தார்.

டோக்கியா, 

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில்  இந்திய வீரர் சவுரவ் சவுத்ரி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.  586 புள்ளிகளுடன் சவுரவ் சவுத்ரி முதலிடம் பிடித்து அசத்தினார்.   இதேபிரிவில், மற்றொரு இந்திய  வீரரான அபிஷேக் வர்மா 14 ஆம் இடம் பிடித்ததால் வெளியேறினார்.

ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் சாய் பிரணீத் இஸ்ரேல் வீரரிடம் தோல்வி அடைந்தார். இஸ்ரேல் வீரர் மிசா லிஸ்பர் மேனிடம் 21-17, 21-15, என்ற நேர் செட் கணக்கில் சாய் பிரணீத் தோல்வி அடைந்தார். 

ஒலிம்பிக் ஜூடோ போட்டி - பெண்களுக்கான தகுதிச்சுற்றில் இந்திய வீராங்கனை சுசிலா தேவி தோல்வி அடைந்தார்.  ஹங்கேரி வீராங்கனை இவாவிடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார். 

Next Story