கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பயிற்சியாளர் டிராவிட் இந்திய அணியுடன் இணைந்தார்


கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட பயிற்சியாளர் டிராவிட் இந்திய அணியுடன் இணைந்தார்
x

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட டிராவிட் துபாய் புறப்பட்டு சென்று இந்திய அணியினருடன் இணைந்துள்ளார்.

துபாய்,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு புறப்படுவதற்கு முன்பாக இந்திய அணியினருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு லேசான அறிகுறியுடன் தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார். வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றனர். இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் அணியினருக்கான பயிற்சி பணிகளை மேற்பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த நிலையில் டிராவிட், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார். பரிசோதனையில் கொரோனா இல்லை என்பதற்கான 'நெகட்டிவ்' முடிவு வந்தது. இதையடுத்து அவர் துபாய் புறப்பட்டு சென்று இந்திய அணியினருடன் இணைந்துள்ளார். இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்ட வி.வி.எஸ்.லட்சுமண் பெங்களூரு திரும்பி இந்திய 'ஏ' அணிருக்கான பயிற்சி முகாமை கவனிப்பார் என்று கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story