இனவெறிக்கு எதிராக முக கவசம் அணிந்தபடி நவோமி ஒசாகா விளையாடினார்.
நவோமி ஒசாகா, ஜப்பான் தாயாருக்கும், ஹைதி தீவைச் சேர்ந்த கருப்பினத் தந்தைக்கும் பிறந்தவர் ஆவார். அமெரிக்காவில் நடக்கும் இனவெறி படுகொலையையும், போலீசாரின் கொடூர தாக்குதலையும் கண்டிப்பதற்கு இந்த அமெரிக்க ஓபனை பயன்படுத்தி கொண்டார். 7 நாளிலும் வெவ்வேறு விதமான முக கவசம் அணிந்து களத்திற்கு வருகை தந்த நவோமி ஒசாகா அதில் இனவெறிக்கு பலியானவர் களின் பெயரை பொறித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.