போரை கேலி செய்த ரஷிய வீரர்கள் - உக்ரைன் டென்னிஸ் வீராங்கனை குற்றச்சாட்டு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 5 March 2022 6:30 PM GMT (Updated: 5 March 2022 6:35 PM GMT)

போரில் மக்கள் சந்திக்கும் துயரங்களை கூறி சில ரஷிய டென்னிஸ் வீரர்கள் சிரித்ததாக உக்ரைனில் பிறந்த டென்னிஸ் வீராங்கனை ஒருவர் தெரிவித்துள்ளார்.

கிவ்,

உக்ரைனில் பிறந்த டென்னிஸ் வீராங்கனையான ஈவா லைஸ், சில ரஷிய வீரர்கள் உக்ரைனில் நடந்த போரை கேலி செய்வதாக குற்றம் சாட்டினார்.

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஜெர்மனிக்காக விளையாடி வருகிறார் எவா லிஸ். இந்நிலையில், கஜகஸ்தானில் நடைபெற்ற டென்னிஸ் தொடரில் பங்கேற்ற ரஷிய வீரர்கள் சிலர், உக்ரைன் மக்களை இழிவுபடுத்தும் வகையில் நடந்துகொண்டதாகவும், போரில் உக்ரைன் மக்கள் சந்திக்கும் துயரங்களை கூறி சிரித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது சொந்த நாட்டிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் போட்டியின் போது தனது நாட்டு கொடியின் வண்ணங்களை அணிய தேர்ந்தெடுத்தபோது, தன்னை மிகவும் இழிவாக பார்த்ததாக எவா லிஸ் கூறினார்.

உக்ரைன் மீதான தாக்குதல்களின் விளைவாக ரஷிய டென்னிஸ் கூட்டமைப்பு மற்றும் பெலாரஸ் டென்னிஸ் கூட்டமைப்பு சர்வதேச நிகழ்வுகளில் இருந்து காலவரையின்றி இடைநிறுத்தப்படுவதாக சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு  செவ்வாய்க்கிழமை அறிவித்தது.

இதுகுறித்து கருத்து கூறிய அவர், சர்வதேச போட்டிகளில் இருந்து ரஷிய அணிகளை தடை செய்வதற்கான முடிவை ஆதரிப்பதாகவும். அதேசமயம், தனிநபர்கள் போட்டிகளில் பங்கேற்பதை தடை செய்யக்கூடாது என்றார்.

Related Tags :
Next Story