பிரெஞ்சு ஓபன் : இறுதிபோட்டிக்கு முன்னேறினார் ரபேல் நடால்
கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.இந்நிலையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ரபெல் நடால் (ஸ்பெயின்) ,அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மனி ) ஆகியோர் மோதினர் .
இந்த ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இதில் 2வது சுற்று ஆட்டத்தின் போது ஸ்வெரெவ்க்கு காலில் காயம் ஏற்பட்டது ,காயத்தால் பாதிக்கப்பட்ட அவரால் இந்த போட்டியை தொடர முடியவில்லை .இதனால் போட்டியிலிருந்து ஸ்வெரெவ் விலகினார் .
இதனால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிபோட்டிக்கு 14வது முறையாக ரபேல் நடால் முன்னேறினார் .
Related Tags :
Next Story