பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : 3-வது சுற்றில் ரபேல் நடால் வெற்றி..!!


பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : 3-வது சுற்றில் ரபேல் நடால் வெற்றி..!!
x

Image Courtesy : AFP 

நடால் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

பாரிஸ்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் 2-வது வருவது பிரெஞ்சு ஓபனாகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.

இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவின் 3-வது சுற்று ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் நெதர்லாந்து 26-ம் நிலை வீரரான போடிக் வான் டி-யை எதிர்கொண்டார். இந்த போட்டியில் நடால் 6-3, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தய சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

நாளை மறுநாள் நடைபெறவுள்ள 4-வது சுற்றில் நடால் பெலிக்ஸ் ஆகர்-அலியாசிம் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.


Next Story