ஓய்வு பெறுவது குறித்து ரபேல் நடால் வெளியிட்ட முக்கிய தகவல்


ஓய்வு பெறுவது  குறித்து ரபேல் நடால் வெளியிட்ட முக்கிய தகவல்
x

Image Courtesy : Roland-Garros Twitter

தினத்தந்தி 5 Jun 2022 6:46 PM GMT (Updated: 5 Jun 2022 6:48 PM GMT)

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி சாம்பியன் பட்டம் தட்டி சென்றுள்ளார் ரபேல் நடால்.

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் பாரீசில் நடந்து வருகின்றன. இதில், ஆடவர் ஒற்றையர் இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ரபேல் நடால் மற்றும் நார்வே நாட்டை சேர்ந்த காஸ்பர் ரூட் ஆகியோர் விளையாடினர்.

இந்நிலையில், போட்டியின் முடிவில் 6-3, 6-3, 6-0 என்ற புள்ளி கணக்கில் நடால் வெற்றி பெற்றார். சாம்பியன் பட்டமும் தட்டி சென்றுள்ளார். இது நடாலின் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பட்டத்திற்கான 14வது வெற்றியாகும்.

இந்த போட்டிக்கு பிறகு பேசிய ரபேல் நடால் கூறியதாவது ;

"நான் 36 வயதில் இங்கு வருவேன் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை.மீண்டும் போட்டித்தன்மையுடன், இறுதிப் போட்டியில் எனது வாழ்க்கையின் மிக முக்கியமான மைதானத்தில் மீண்டும் ஒரு முறை விளையாடுகிறேன் .

மேலும் ஓய்வு முடிவு குறித்து பேசிய அவர், தொடர விரும்புவதாக கூறினார் ;

"எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் தொடர முயற்சிப்பதற்காக நான் தொடர்ந்து போராடப் போகிறேன்," என்று நடால் கூறினார்,


Next Story