விம்பிள்டன் டென்னிஸ் : அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்


விம்பிள்டன் டென்னிஸ் : அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்
x

Image Courtesy : Roland-Garros Twitter 

ரபேல் நடால் - பிரான்சிஸ்கோ செருண்டோலோ ஆகியோர் மோதினர்.

லண்டன்,

ஆண்டுதோறும் 4 வகையான 'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் மிக உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நேற்று தொடங்கியது .இந்த தொடர் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ரபேல் நடால் - அர்ஜென்டினாவின் பிரான்சிஸ்கோ செருண்டோலோ ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் 6-4,6-3,3-6,6-4 என்ற செட் கணக்கில் ரபேல் நடால் வெற்றி பெற்றார்.இதனால் நடால் விம்பிள்டன் டென்னிஸ்-ல் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.


Next Story