விம்பிள்டன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் வோன்ட்ரோசோவா சாம்பியன்..!


விம்பிள்டன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் வோன்ட்ரோசோவா சாம்பியன்..!
x

மார்கெட்டா வோன்ட்ரோசோவா (image courtesy: WTA twitter via ANI)

விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் வோன்ட்ரோசோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரைஇறுதியில் தரவரிசையில் 42-வது இடம் வகிக்கும் மார்கெட்டா வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர் செட்டில் எலினா ஸ்விடோலினாவை (உக்ரைன்) வெளியேற்றி முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மார்கெட்டா வோன்ட்ரோசோவா, துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபீருடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் வோன்ட்ரோசோவா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ஜபீரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.


Next Story