விம்பிள்டன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ரைபகினாவை வெளியேற்றினார் ஜாபியர்


விம்பிள்டன் டென்னிஸ்: நடப்பு சாம்பியன் ரைபகினாவை வெளியேற்றினார் ஜாபியர்
x

Image Courtesy : AFP 

ஜாபியர் அரைஇறுதியில் சபலென்காவை இன்று சந்திக்கிறார்.

லண்டன்,

'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான அரினா சபலென்கா ( பெலாரஸ்) 6-2, 6-4 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ்சை வீழ்த்தினார் .

இன்னொரு கால்இறுதியில் 6-ம் நிலை வீராங்கனை ஆன்ஸ் ஜாபியர் (துனிசியா) சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (5-7), 6-4, 6-1 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ளவருமான எலினா ரைபகினாவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்தார். இதன் மூலம் கடந்த ஆண்டு விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில ரைபகினாவிடம் அடைந்த தோல்விக்கு ஜாபியர் பழிதீர்த்துக் கொண்டார். ஜாபியர் அரைஇறுதியில் சபலென்காவை இன்று சந்திக்கிறார். மற்றொரு அரைஇறுதியில் ஸ்விடோலினா(உக்ரைன்)- வோன்ட்ரோசோவா (செக்குடியரசு) மோதுகிறார்கள்.


Next Story