பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மரியா சக்காரி 2-வது வெற்றி


பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்: மரியா சக்காரி 2-வது வெற்றி
x

image courtesy: wta twitter

பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது.

டெக்சாஸ்,

டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ.இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் போர்த் வொர்த் நகரில் நடந்து வருகிறது. இதில் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு இருக்கின்றனர்.

ஒவ்வொரு வீராங்கனையும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ரவுண்ட் ராபின் லீக் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் 'நான்சி ரிச்சே' பிரிவில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் கிரீஸ் நாட்டு வீராங்கனை மரியா சக்காரி 6-2, 6-4 என்ற நேர்செட்டில் சபலென்காவை (பெலாரஸ்) தோற்கடித்து தொடர்ந்து 2-வது வெற்றியை பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் துனிசியா வீராங்கனை ஒன்ஸ் ஜபிர் 1-6, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கினார்.


Next Story