ஒரு கிடாயின் கருணை மனு’வும்

ஒரு ஆட்டை முக்கிய கதாபாத்திரமாக வைத்து உருவாகியிருக்கும் படம், ‘ஒரு கிடாயின் கருணை மனு.;

Update:2017-03-28 13:13 IST
ஆட்டுக்கார அலமேலுவும், ‘ஒரு கிடாயின் கருணை மனு’வும்...

’ இதில், விதார்த்-ரவீனா கதாநாயகன்-கதாநாயகியாக நடித்துள்ளனர். ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்ய, ரகுராம் இசையமைத்து இருக்கிறார். சுரேஷ் சங்கையா டைரக்டு செய்திருக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில், நடிகர் சங்க தலைவர் நாசர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்.

“முழுமையான அர்ப்பணிப்போடு பணிபுரியும் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை கொண்ட படம், நிச்சயமாக ரசிகர்களை சென்றடைந்து விடும். அப்படிப்பட்ட ஒரு படம்தான் ‘ஒரு கிடாயின் கருணை மனு.’ ஒரு தரமான-தனித்துவமான கதையை தேர்வு செய்த ஈரோஸ் நிறுவனத்துக்கு என் பாராட்டுகள்.

பல வருடங்களுக்கு முன்பு ஒரு ஆட்டை வைத்து எடுக்கப்பட்ட ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் எப்படி அமோக வரவேற்பை பெற்றதோ, அதே போன்ற வரவேற்பையும், வெற்றியையும் இந்த படமும் பெறும்.”

மேலும் செய்திகள்