நெடுநல்வாடை

தாத்தா-பேரன் பாசப்போராட்ட கதை ‘நெடுநல்வாடை’ ஒரு தாத்தா-பேரன் பாசப்போராட்டத்தை மையமாக வைத்து, ‘நெடுநல்வாடை’ என்ற படம் தயாராகிறது.;

Update:2017-08-16 14:46 IST
‘பூ’ ராமு 70 வயதான விவசாயியாக, தாத்தா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பேரனாக புதுமுகம் இளங்கோ நடிக்கிறார். அஞ்சலி நாயர், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

செல்வகண்ணன் டைரக்டு செய்ய, 50 கல்லூரி மாணவர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் செல்வ கண்ணன் கூறியதாவது:-
“நெல்லை மாவட்டத்தில் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருக்கும் மனிதர்களின் உண்மை கதை இது. கிழக்கு சீமையிலே, மாயாண்டி குடும்பத்தார், தென்மேற்கு பருவக்காற்று போன்ற கிராமத்து படங்களின் வரிசையில், இந்த படமும் இடம் பெறும்.

படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் வைரமுத்து எழுதியிருக்கிறார். ஜோஸ் பிராங்க் ளின் இசையமைக்கிறார்.”

மேலும் செய்திகள்