கார்த்தி நடிக்கும் படத்தை சூர்யா தயாரிக்கிறார்
பாண்டிராஜ் டைரக்ஷனில் கார்த்தி நடிக்கும் படத்தை சூர்யா தயாரிக்கிறார்;
‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை அடுத்து கார்த்தி ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. பாண்டிராஜ் டைரக்டு செய்கிறார். நடிகர் சூர்யாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது.
படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கியது. சூர்யா-கார்த்தியின் தாயார் லட்சுமி சிவகுமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 5 நாட்கள் சென்னையிலும், 40 நாட்கள் தென்காசியிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
தொடக்க விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மவுனிகா, இளவரசு, சவுந்தர்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார், சுசீந்திரன், சுதா கங்கோரா, இசையமைப்பாளர் டி.இமான், இணை தயாரிப்பாளார் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண், சக்தி பிலிம்ஸ் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கியது. சூர்யா-கார்த்தியின் தாயார் லட்சுமி சிவகுமார் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து 5 நாட்கள் சென்னையிலும், 40 நாட்கள் தென்காசியிலும் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.
தொடக்க விழாவில் சிவகுமார், சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சாயிஷா சாய்கல், பொன்வண்ணன், சூரி, ஸ்ரீமன், மாரிமுத்து, பானுப்ரியா, ரமா, மவுனிகா, இளவரசு, சவுந்தர்ராஜா, ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், டைரக்டர் மனோஜ்குமார், சுசீந்திரன், சுதா கங்கோரா, இசையமைப்பாளர் டி.இமான், இணை தயாரிப்பாளார் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பாளர்கள் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு, பிரின்ஸ் பிக்சர்ஸ் லட்சுமண், சக்தி பிலிம்ஸ் சக்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.