கண்ணாடி

‘திருடன் போலீஸ்,’ ‘உள்குத்து’ ஆகிய படங்களை டைரக்டு செய்த கார்த்திக் ராஜு அடுத்து, ‘கண்ணாடி’ என்ற பெயரில் ஒரு புதிய படத்தை டைரக்டு செய்து வருகிறார்.

Update: 2018-11-10 05:31 GMT
பயங்கர திகில் படம் தமிழ்-தெலுங்கில் உருவாகும் ‘கண்ணாடி’  படத்தை பற்றி அவர் சொல்கிறார்:-

‘‘அமலாபால் கதாநாயகியாக நடித்து வரும் ‘ஆடை’ படத்தை தயாரித்த நிறுவனம், இது. இந்த படத்தில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். இவர், மாநகரம், நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன் ஆகிய படங்களில் நடித்தவர். ‘கண்ணாடி’ படத்தில் இவருக்கு ஜோடியாக இந்தி நடிகை அன்யாசிங் நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், கருணாகரன், பூர்ணிமா பாக்யராஜ், பிரகதி மற்றும் பலரும் நடிக்கிறார்கள்.

படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்குகிறேன். திகில் காட்சிகளை விரும்பி ரசிக்கும் ரசிகர்களுக்காகவே எடுக்கப்படும் படம், இது. வழக்கமான திகில் காட்சிகளாக இல்லாமல் ரசிகர்களுக்கு புதிய அனு பவத்தை கொடுக்கும்.

எஸ்.எஸ்.தமன் இசையமைக்க பி.கே.வர்மா ஒளிப் பதிவு செய்கிறார். கிருபாகரன், விஜி சுப்பிரமணியன், சாந்தி சீனிவாச குரு ஆகியோர் தயாரிக்கிறார்கள். படுபயங்கரமான திகில் படமாக உருவாகி வரும் ‘கண்ணாடி,’ சென்னை மற்றும் ஐதராபாத்தில் வளர்ந்து இருக் கிறது.’’

மேலும் செய்திகள்