வரிசி

காதலும், திகிலும் நிறைந்த ‘வரிசி’

Update: 2021-04-05 15:19 GMT
ஒரு ஊரில் மென்பொருள் பணியாளர், சமூக ஊடகத்துக்கு அடிமையான ஒருவர், சி.பி.ஐ. அதிகாரி ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். எதிர்பாராத ஒரு அதிர்ச்சியான சம்பவம் அவர் களின் வாழ்வை புரட்டிப் போடுகிறது. அதில் இருந்து அவர்கள் எப்படி வெளிவருகிறார்கள்? என்பதை திகிலாக சொல்வதே, ‘வரிசி’ என் கிறார், அந்த படத்தின் டைரக்டர் கார்த்திக் தாஸ்.

படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், “பொதுவாகவே திகில் படங்கள் வெற்றிக்கு உத்தரவாதம் அளிக்கும். அந்த வகையில், ‘வரிசி’யும் ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும்” என்றார்.

இந்த படத்தை சுவாஜொகர், சந்திரசேகர் மாணிக்கம், ப்ரியா சீனிவாசன், கார்த்திக் கணபதி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

மேலும் செய்திகள்