‘மூன் ஸ்டோன்’ அணிகலன்கள்
அனைத்து விதமான ஆடைகளுக்கும் பொருந்தும்படியான, பளபளப்பான மூன் ஸ்டோனில் உருவாக்கப்பட்ட சில அணிகலன்களை இந்தத் தொகுப்பில் காணலாம்
‘சந்திரகாந்தம்’ என்று அழைக்கப்படும் ‘மூன் ஸ்டோன்’ முதன் முதலில் ரோமாபுரி நகரத்தில் கண்டறியப்பட்டது. நிலவின் ஒளியில் பார்க்கும்போது நீல வண்ண முத்துப் போன்று காட்சியளித்ததால், இந்தக் கல்லுக்கு இத்தகைய பெயர் ஏற்பட்டது. எல்லா காலநிலையிலும் குளிர்ச்சியாகவே இருப்பது இதன் தனிச்சிறப்பு.
பலவகையான அணிகலன்களில் ‘மூன் ஸ்டோன்’ பதிக்கப்படுகிறது. பெண்கள் இதனை விரும்பி அணிகின்றனர். அனைத்து விதமான ஆடைகளுக்கும் பொருந்தும்படியான, பளபளப்பான மூன் ஸ்டோனில் உருவாக்கப்பட்ட சில அணிகலன்களை இந்தத் தொகுப்பில் காணலாம்...