காங்கிரசுக்கு பின்னடைவு, சத்தீஷ்காரில் அஜித் ஜோகியுடன் கைகோர்த்தார் மாயாவதி

சத்தீஷ்கார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுடன் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன் மாயாவதி கூட்டணி வைத்துள்ளார்.

Update: 2018-09-20 13:26 GMT
பா.ஜனதா ஆட்சி செய்யும் சத்தீஷ்கார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாக சத்தீஷ்கார் மாநிலத்தில் மாயாவதி, காங்கிரசுடன் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன் கூட்டணி என அறிவித்துள்ளார். அஜித் ஜோகியின் ஜனதா காங்கிரசுடன் கூட்டணியை அறிவித்த மாயாவதி, வெற்றிப்பெற்றால் அஜித் ஜோகிதான் முதல்வர் என்றும் அறிவித்துள்ளார். 

பகுஜன் சமாஜ் 35 தொகுதிகளிலும், ஜனதா காங்கிரஸ் 55 தொகுதிகளில் போட்டியிடும் என கூறியுள்ளார் மாயாவதி. எஸ்.சி. மற்றும் ஆதிவாசி மக்களின் மேம்பாட்டுக்காக எங்களுடைய கூட்டணி பணியாற்றும் என தெரிவித்துள்ளனர். இந்த கூட்டணி வாக்குகளை பிரிக்கும், காங்கிரசுக்கு பின்னடைவாக அமையலாம் எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்