5 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

கம்பத்தில் 5 கிலோ புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-18 19:00 GMT

கம்பம் சுங்கம் தெருவை சேர்ந்தவர் தமீஜ் அகமது (வயது 22). இவர் ஏ.கே.ஜி. திடல் அருகே பீடா கடை வைத்துள்ளார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் ஆனந்திற்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அந்த கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அங்கு ஒரு சாக்கில் 5 கிலோ 200 கிராம் புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தமீஜ் அகமதுவை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்