கிணற்றில் பிணமாக மிதந்த கார் டிரைவர் உடல் மீட்பு

சங்கராபுரம் அருகே கிணற்றில் பிணமாக மிதந்த கார் டிரைவர் உடல் மீட்பு

Update: 2022-05-19 17:48 GMT

சங்கராபுரம்

சங்கராபுரத்தை அடுத்த புதுப்பாலப்பட்டு காலனி அருகே தனியாருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் ஆண் நபர் ஒருவர் பிணமாக மிதந்ததை அந்த பகுதி மக்கள் பார்த்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பிணமாக மிதந்த நபரின் உடலை மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் புதுப்பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கார் டிரைவர் சுந்தரமூர்த்தி(வயது 41) என்பது தெரிய வந்தது. இதுகுறித்து அவரது மனைவி அகிலா கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவுசெய்து சுந்தரமூர்த்தியின் சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்