மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Update: 2023-01-08 18:45 GMT

வேதாரண்யம் பகுதியில் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளபள்ளம், மணியன்தீவு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக மீனவர்கள் தங்களது பைபர் படகு மற்றும் மீன்பிடி வலைகளை கரையில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலம் என்பதால் இங்கு வெளியூர் மீனவர்கள் தங்கி மீன்பிடித்து வருகின்றனர். தற்போது கடல் சீற்றம் காரணமாக வெளியூர் மீனவர்களும் மீன்பிடிக்க செல்லாமல் வீடுகளிலே முடங்கி உள்ளனர். மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்