மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் சாவு

பணகுடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.;

Update:2023-06-06 00:48 IST

வடக்கன்குளம்:

நெல்லை அருகே பழையபேட்டையைச் சேர்ந்தவர் செல்லப்பா மகன் நடராஜ் (வயது 20). கொத்தனாரான இவர் தற்போது பணகுடியில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை இவரும், கனி என்பவரும் மோட்டார் சைக்கிளில் கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தனர். கன்னியாகுமரி பைபாஸ் சாலையில் கருங்குளம் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையின் தடுப்பு சுவரில் மோதியது. இதில் நடராஜ் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் கனி படுகாயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பழவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கனியை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் நடராஜ் உடல் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்