மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

சித்ரா பவுர்ணமியையொட்டி மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-05-06 18:45 GMT

திருப்புவனம்

திருப்புவனம் அருகே உள்ளது மடப்புரம். இங்கு தென் மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பத்திரகாளி அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சன பொடி உள்பட பல்வேறு வகையான ெபாருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்றன. பின்பு பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பவுர்ணமி பூஜையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்