அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 23 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் விஜய் தொடர்ந்து முதலிடம்

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 8வது சுற்றின் முடிவில், 23 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் விஜய் தொடர்ந்து முதலிடம்

இதுவரை 544 காளைகள் களமிறக்கப்பட்டுள்ளன

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த அழகுபேச்சி என்ற பள்ளி மாணவி அவிழ்த்த காளையை மாடுபிடி வீரர் விஜய் அடக்கிய நிலையில், தான் பெற்ற பரிசை மாணவியிடமே வழங்கி வாழ்த்து தெரிவித்தார்!

காலை 8 மணிக்கு ஜல்லிகட்டு துவங்கியதில் இருந்து நண்பகல் 12.30 மணி வரை மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள், பார்வையாளர்கள் உட்பட 11 பேர் படுகாயமடைந்து மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டனர்.

மாடுபிடி வீரரான கபிலன் மற்றும் காளை உரிமையாளரான சென்னை மாநாகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றும் திருப்புவனத்தை சேர்ந்த ராஜ்கமல் மற்றும் பார்வையாளர்கள் உட்பட 11 பேர் நண்பகல் 12.30 மணி வரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2023-01-15 09:58 GMT

Linked news