அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 9-ம் சுற்று நிறைவு

9 சுற்றுகள் நிறைவில் 578 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மாடுபிடி வீரர் விஜய் 23 காளைகளை அடக்கி முன்னிலை பெற்றுள்ளார்.

அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்தி 15 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தில் உள்ளார்.

இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டில் இதுவரை 45 பேர் காயமடைந்துள்ளனர். இதில் மாட்டு உரிமையாளர்கள் 20 பேர், மாடுபிடி வீரர்கள் 16 பேர், பார்வையாளர்கள் 9 பேர் காயமடைந்துள்ள நிலையில், 20 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-01-15 11:26 GMT

Linked news