உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் வழங்கிய ஆயுதங்கள் இருந்த கிடங்கை அழித்துவிட்டோம் - ரஷியா

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு வழங்கிய ஆயுதங்கள் இருந்த கிடங்கை அழித்து விட்டதாக ரஷியா தெரிவித்துள்ளது.

மேற்கு உக்ரைனின் டெர்னோபிலில் உள்ள கிடங்கை, ரஷியப் படைகள் கப்பலில் இருந்து ஏவப்படும் காலிபர் ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்ததாக கூறியுள்ளது. அதனை மறுக்கும் வகையில், கருங்கடலில் இருந்து சோர்ட்கிவ் நகரின் மீது நிகழ்த்திய ஏவுகணை தாக்குதலில், ராணுவ தளவாடங்கள் சிறிதளவு சேதமடைந்ததாகவும், 22 பேர் காயமடைந்தனர் என்றும் டெர்னோபில் பிராந்திய ஆளுநர் கூறினார். மேலும், அங்கு ஆயுதங்கள் ஏதும் பதுக்கி வைக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2022-06-13 06:40 GMT

Linked news