இன்று மாலை முதல் அதிகனமழை - பிரதீப் ஜான்

வங்கக்கடலில் புயல் உருவாக இருக்கும் சூழலில் சென்னை மாநகரில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இன்று மாலை அல்லது இரவு முதல் அதிகனமழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாளை மறுநாள் வரை மழை நீடிக்க வாய்ப்பு உள்ளது. நேற்றிரவு சிறு மேக கூட்டமே 5 முதல் 6 செ.மீ அளவுக்கு மழை கொடுத்தது என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

Update: 2024-11-29 07:44 GMT

Linked news