சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில்... ... சாம்பியன்ஸ் டிராபி: நியூசிலாந்தை வீழ்த்தி கோப்பையை வென்ற இந்தியா

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் சாண்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வில் யங் - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர்.

இவர்களில் வில் யங் நிதானத்தை கடைபிடிக்க ரச்சின் ரவீந்திரா அதிரடியாக விளையாடினார். முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் அமைத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. வில் யங் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்திலேயே ரச்சின் ரவீந்திரா 37 ரன்களிலும், வில்லியம்சன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

மிடில் ஓவர்களில் கிளென் பிலிப்ஸ் - டேரில் மிட்செல் ஒரளவு நன்றாக விளையாடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதனால் சரிவிலிருந்து மீண்ட நியூசிலாந்து நல்ல நிலையை எட்டியது. கிளென் பிலிப்ஸ் 34 ரன்களில் ஆட்டமிழந்தார். நிதான ஆட்டத்தை கடைபிடித்து வந்த டேரில் மிட்செல் 101 பந்துகளில் 63 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் பிரெஸ்வெல் அதிரடியாக விளையாடி அரைசதம் (53 ரன்கள்) அடித்து அணிக்கு வலு சேர்த்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 7 விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்துள்ளது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து 252 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்தியா களமிறங்க உள்ளது. 

Update: 2025-03-09 12:32 GMT

Linked news