வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பிரியங்கா காந்தி
வயநாடு மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி என பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 6 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பிரியங்கா காந்தி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Update: 2024-11-23 10:06 GMT