தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை தோல்வி
சென்னை ரிப்பன் மாளிகையில் அமைச்சர்கள் - தூய்மைப் பணியாளர்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மேயர் பிரியா, ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தநிலையில் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. போராட்டம் தொடரும் என தூய்மை பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.இனி முதல்-அமைச்சரோடுதான் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தூய்மை பணியாளர்கள் கூறியுள்ளனர்.
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை அங்கிருந்து அப்புறப்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-08-13 11:24 GMT