திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
திருப்பரங்குன்றம் வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை தொல்லியல் துறையிடம் ஆய்வுக்கு ஒப்படைக்கக் கோரிய வழக்கில் மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக இந்து தர்ம பரிஷத் பெயரில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான அந்த மனுவில், திருப்பரங்குன்றம் கோவிலிலிருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும் என்றும், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நிரந்தரமாக தீபம் ஏற்ற உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
Update: 2026-01-23 06:08 GMT