மின்சாரம் தாக்கியதால் தூய்மைப்பணியாளர் உயிரிழப்பு
சென்னை எம்.ஜி.ஆர் நகரில் கழிவுநீர் அடைப்பை சீரமைக்கும் பணியின்போது தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அனுபவம் இல்லாமல் பணியில் ஈடுபட்டதால் பட்டாபி என்ற தூய்மை பணியாளர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழந்த பட்டாபியின் உடலை கைப்பற்றி கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் அனுப்பி வைத்தனர்.
Update: 2025-02-06 10:29 GMT