அண்ணா அறிவாலயத்தில் திமுக முன்னாள் எம்.எல்.ஏவால் சலசலப்பு

அண்ணா அறிவாலயத்தில் திருத்துறைப்பூண்டி தொகுதி திமுக முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன் முதல்-அமைச்சரை சந்திக்க அனுமதி மறுத்ததாக கூறி கட்சியின் உறுப்பினர் அட்டையை வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அனுமதி மறுக்கிறீர்களா என ஆடலரசன் கேள்வி எழுப்பினார். கோபமடைந்த முன்னாள் எம்.எல்.ஏ ஆடலரசன் பின்னர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்ததாக ஆடலரசன் தெரிவித்தார்.

Update: 2025-12-10 09:07 GMT

Linked news