நயினார் நாகேந்திரன் அலுவலக உதவியாளர் மீது வழக்கு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-09-2025
நயினார் நாகேந்திரன் அலுவலக உதவியாளர் மீது வழக்கு
மத மோதலை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் பாதிரியார் டேவிட் நிர்மல்துரை என்பவரின் பணியை தடுத்து மிரட்டியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து நயினார் நாகேந்திரனின் அலுவலக உதவியாளர் அங்குராஜ் உள்ளிட்ட 3 பேர் மீது கொலை மிரட்டல், மத மோதலை தூண்டுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-09-26 05:16 GMT