அமைச்சர் மா.சுப்பிரமணியன் விடுவிப்பு

2002ம் ஆண்டு சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் அதிமுக - திமுக கவுன்சிலர்கள் இடையே மோதலில் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இவ்வழக்கில் 2019ம் ஆண்டு போலீசார், சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் அமைச்சர் மா.சுப்பிரமணியனை விடுவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Update: 2025-01-10 07:43 GMT

Linked news