புதுச்சேரியில் உள்ள பள்ளி, கல்லூரிகளை முகாம்களாக மாற்ற உத்தரவு

புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளை தங்கும் முகாமாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. புயல், மழையால் வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்க வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மூடப்பட்டிருக்கும் கல்வி நிறுவனங்களை உடனடியாக திறக்க கோரி மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2024-12-01 05:59 GMT

Linked news