பெஞ்சல் புயல் - மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்

*வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள பெஞ்சல் புயல், இன்று மாலை மாமல்லபுரம் - காரைக்கால் இடையே கரையைக் கடக்க உள்ளது

* வட கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 80 கி.மீ வேகம் வரை காற்று வீசலாம்

* காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் கட்டுமானத் தளங்களில் உள்ள உயர் கிரேன்கள், விளம்பர பதாகைகளை இறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

*கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

*சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் உள்ள கடற்கரையில் பொதுமக்கள் கூடவும், குளிக்கவும் தடை விதிப்பு

* சென்னையில் உள்ள பூங்காக்களை மூட உத்தரவு

*காற்றின் வேகத்திற்கு ஏற்ப ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என தெரிவிப்பு

*மெட்ரோ ரெயில்சேவை வழக்கம் போல் இருக்கும்.

*மாநகர பஸ் சேவை வழக்கம் போல இயங்கும். புயல் கரையக் கடக்கும் போது கிழக்கு கடற்கரை சாலை மற்றும் ஓ.எம்.ஆர் சாலையில் மாநகர பஸ் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும்.

Update: 2024-11-29 19:13 GMT

Linked news